பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்கள் – பால் சக்காரியா
தீராநதி மே 2019 இதழில் பால் சக்காரியாவுடன் மலர்வதியின் நேர்காணல் வாசிக்கக் கிடைத்தது. தமிழ் நாட்டுப் பெண்களை ஒப்பிட கேரளப் பெண்கள் சுதந்திரம் குறைவானவர்கள். மூன்று மதங்களுமே காரணம் என்கிறார் சக்காரியா. சுமார் 7 வருடங்களுக்கு முன் மதங்களே பெண்ணடிமைத்தனத்தை மேலெடுக்கின்றன என்னும் தொனியில் நான் ஒரு கட்டுரையை திண்ணை இணைய தளத்துக்கு அனுப்பி இருந்தேன். ஆசிரியர் குழு திட்டவட்டமாக இது அடிப்படையற்றது என அந்தக் கட்டுரையை தளத்தில் பிரசுரிக்கவில்லை. அவர்கள் கருத்தை நான் நிராகரிக்கவுமில்லை. சிந்தனையில் அதை அலசிக் கொண்டிருந்தேன். மற்றும் இதை நிறுவுவது சாத்தியமா என்பதையும். சக்காரியா தம் கருத்தாகவே இதைக் கூறுகிறார். நேர்காணலில் மற்றொன்றை அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார். படைப்பாளியின் சாதி/மதம் இவற்றை அலசுவது, தூக்கிப் பிடிப்பது படைப்புக்கு எதிரான செயல் என்னும் கருத்தே அது. அவருடைய படைப்புகள் பலவற்றிலும் கிறித்துவம் மற்றும் ஏசு பற்றிய புனைவுகள் சர்ச்சைக்கு உள்ளாயின. அவற்றை அவர் பைபிள் அடிப்படையிலானவை என்று கூறி படைப்புச் சுதந்திரத்தை நிலை நாட்டுகிறார். கேரளாவில் படைப்பாளிக்கு உள்ள அங்கீகாரம் மற்றும் வரவேற்பு பற்றியும் தெரிந்து கொள்கிறோம்.
சக்காரியாவின் படைப்புகள் நவீனத்துவத்தில் முன்னுதாரணம் ஆனவை. அவரது பல படைப்புகளை ஜெயஸ்ரீ மொழிபெயர்த்துள்ளார். சுந்தரராமசாமி, அசோகமித்திரன் மற்றும் ஜெயமோகனுடனான நட்பையும் பால் சக்காரியா நினைவு கூருகிறார். விரிவான கூர்மையான பதில்களாலான நேர்காணல்.
(image courtesy:rediff.com)
காலம் கடக்கவில்லை
திண்ணைக்கு நீங்க அனுப்பிய கட்டுரையை உங்கள் தளத்தில் பிரசுரியுங்கள்
Thanks will search and upload.