(26.4.2015 puthu.thinnai.com இணைய இதழில் வெளியானது)
அபிநயம்
தோட்டக்காரர்
கூட்டித் தள்ளும்
சருகுகளூடே
வாடிய பூக்கள்
கணிசமுண்டு
தோட்டத்துக்
கனிச் சுவையில்
காய்
அதிருந்த பூ
நினைவை நெருடா
மாறாப் புன்னகை
எப்போதும் எதையோ
மறைக்கும் என்பதை
விழிகள் உணரா
புன்னகை விரிப்பைத் தாண்டி
விழிகள் அடையா
மலரின் மர்மம்
ஏக்கம்
மனக்குமிழ்களாய்
கொப்பளிக்கும் மலர்
எது?
வண்ணமில்லாததா
இல்லை வாசமில்லாததா?
இரும்புத் தட்டில்
எடைக்கல்லின் இணையாவதா?
ரசாயனப் புன்னகை
பிளாஸ்டிக் பைக்குள்
விரிக்கும் பூங்கொத்தா?
(image courtesy:tumbler18.com)
இதழ்கள் சிறகுகள்
என்றே விரித்து விரித்து
முயன்று முயன்று
தோற்றுத் தோற்று
சுமைகள் இவை என்னும்
புரிதலின் கசப்பையும்
புன்னகைக்கும் பூவின்
அபிநயம்
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்