ஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை


Image result for images smith and warner

ஆஸ்திரேலியாவின் பந்துத் தில்லுமுல்லு முதல் பெரியாரிஸ்ட் வரை – ஆர். அபிலாஷ் கட்டுரை

உயிர்மை ஏப்ரல் 2018 இதழில் ஆர். அபிலாஷ் நுட்பமான ஒரு மனத்தத்துவ அலசல் செய்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். தீவிர எழுத்தாளர்களில் கிரிக்கெட் பற்றி எந்தத் தீண்டாமையும் இல்லாத ஒரு அதிசய மனிதர் அவர்.

ஆஸ்திரேலியர்கள் பெரிதும் தமது பண்பாட்டு மேன்மை பற்றித் தம்பட்ட அடித்துக் கொள்பவர்கள். ஏன் இதைச் செய்தார்கள்? மறுபக்கம் ஒரு பெரியாரிஸ்ட் ஜாதி சங்கத்தில் சேர்ந்தார். ஏன் ?

ஆர். அபிலாஷ் வார்த்தைகளில் அந்த உளவியல் இது தான் : நாம் ஒன்றை வெகுவாக ஊன்றிப் பிரகடனம் செய்யும் போது அதன் அபத்தமும் யதார்த்தமின்மையும் நம் உள் மனதுக்குத் தெரிகிறது. உடனே நம் செயல்கள் நம் சொல்லுக்கு எதிராகத் திரும்புகின்றன. இது ஒரு விதத்தில் நம் லட்சியவாதத்தின், விழுமியப் பிரகடனத்தின் மிகையைக் குறைத்து சமனம் செய்வதற்கான நம் மனதின் முயற்சியே எனலாம்.

மிகவும் ஆழமான ஒரு உளச் சிக்கல் இது. நாம் பல முறை நமக்கே சந்தேகமாக இருப்பதையே முடியும் முடியும் என சுய உத்திரவாதத்துக்குகாகவே சொல்லிக் கொள்வோம். மிகையாகப் பேசுவது நம் ஊரில் யாரிடம் இல்லை என்று தான் தேட வேண்டும். ஒரு மிகையை நாம் உதிர்க்கும் போதே அதன் போலித் தன்மை உள்ளுக்குள்ளே உறுத்துகிறது.

ஆர். அபிலாஷின் கட்டுரைகள் மற்றும் இலக்கிய விமர்சனங்கள் செறிவுள்ளவை.

 

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in நாட் குறிப்பு and tagged , , , , . Bookmark the permalink.

Leave a comment