இலக்கியத்துக்கான நோபல் பரிசு
சீனத்தின் மோ யான் என்னும் எழுத்தாளருக்கு நோபல் பரிசு அறிவிக்கப் பட்டிருக்கிறது. மோ யான் என்பதற்கு “பேசாதே” என்று பொருள். ராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருந்த போது எழுத்துப் பணியைத் தொடங்கியதால் தமது பணி வெளியில் தெரியக்கூடாது என்னும் கவலையுடன் வைத்த புனைப் பெயரை அந்தப் பொருள் பட பேசாதே என்று வைத்துக் கொண்டார். அவரது இயற் பெயர் காவ் ஜிங்ஜியான் கம்யூனிஸ்ட் அரசை விமர்சித்து எழுதியதற்காக சீனத்தில் தண்டனைக்குள்ளாக்கப் படும் சூழலில் பிரான்ஸுக்கு இடம் பெய்ர்ந்தவர். 2000வது ஆண்டு வெளியான Soul Mountain என்னும் நாவலுக்காக அவர் பரிசை வென்றுள்ளார் அவரது படைப்புகள் நாட்டுப்புறக் கதைகள், வரலாறு மற்றும் சமகாலத்தை ஒன்றிணைக்கின்றன” என்று பரிசுக் கமிட்டி பாராட்டுத் தெரிவித்துள்ளது. 1987ல் வெளியான Red Sorghum என்னும் நாவல் அவருக்குப் புகழைத் தேடித் தந்தது. ஜப்பானை எதிர்த்த யுத்தத்தில் ஒரு சாதாரணப் பிரஜையின் காதல் கதையாக அவன் படும் இன்னல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட அந்த நாவல் திரைப்படமாகி 1988ல் பெர்லின் உலகத் திரைப்பட விழாவில் பரிசைப் பெற்ற போது அவர் உலகப் புகழ் பெற்றார். சீனத்திலிருந்து இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெறும் முதல் எழுத்தாளர் இவரே. ஆரம்ப காலத்தில் எளிய யதார்த்தமான நாவல்களை எழுதிய அவர் பின்னாளில் பரிட்சார்த்தமான வெவ்வேறு கதாபாத்திரங்கள் கதையை நகர்த்திச் செல்லும் சிக்கலான “சீன மாய யதார்த்தம்’ என்னும் வகையிலான படைப்புக்களை எழுதினார்.